MAS Intimates Thurulie நிறுவனத்தினூடாக அரணாயக்க அசு பினி ஓடையை சுத்தம் செய்யும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரணாயக்க பிரதேச சபையும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் ஒன்றிணைந்தனர். பொலித்தீன் மற்றும் பிளாத்திக்கு அற்ற சூழலொன்றை நிர்மாணிக்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Author: Diyani Editors
Express pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் மாசடைந்த நீர்கொழும்பு கடற்கரையை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அதனை சுத்திகரிப்புச் செய்யும் வேலைத்திட்டத்தில் MAS KREEDA Synergy நிறுவனத்தின் அங்கத்தவர்கள் பங்கு பற்றினர்.
உலக நீர் தினத்தை நினைவுகூறும் முகமாக MAS KREEDA Shadeline நிறுவனத்தால் விஷேட வைபவங்கள் அண்மையில் மஹியங்கன ப/ஒருபெதிவெவ தேசிய பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது ‘நீரிம் மகத்துவத்தை உணர்வோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சுவரொட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை தோட்டத்தில் பழமரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சித் திட்டமும் பாடசாலை வளாகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்புத் தொகுதியை விஸ்தரிப்பதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
MAS KREEDA Shadeline நிறுவனத்தில் பணி புரியும் பாலூட்டும் தாய்மார்களின் தேவைகளை கருத்திற் கொண்டு சகல வசதிகளுடனும் கூடிய தனியான இடமொன்றை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்கப்பட்டது.
நாட்டில் எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிடும் வண்ணம் அவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்காக MAS குழுமத்தின் ஒருசில நிறுவனங்களால் பல்வேறு பிரதேசங்களில் இலவச பேரூந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
உயிர் பல்வகைமையை பாதுகாத்து மெருகூட்டல் எனும் நோக்குடன் கண்டி பிரதேசத்தில் முதலாவது பட்டாம்பூச்சு பூங்காவை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் மஹாமாய மகளிர் வித்தியாலயத்தில் MAS Intimates Linea Clothing நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
பௌர்ணமி தினத்திற்காக மிஹிந்தலை விகாரை வளாகத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் MAS KREEDA Mihintale நிறுவனத்தின் Sustainability மற்றும் ESH குழு நிறுவன முகாமைத்துவம் அடங்கிய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. மிஹிந்தலை விகாரை வளாகத்தினுள் வீசப்பட்டிருந்த பொலித்தீன் காட்போட் மற்றும் உணவுக் கழிவுகளால் அசுத்தப்படுத்தப்பட்டிருந்த சூழலை மீண்டும் பாதுகாத்தல் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கருவாகும்.
மூன்றாவது தடவையும் பௌர்ணமி தினத்தில் மரவள்ளி அன்னதானம் பியகம அயத்தி நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது.
MAS Active Linea Intimo நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவின் பங்களிப்புடன் மண்டாவில மஹிந்த ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.
மலேசியாவின் குச்சின் நகரில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டியில் 2500 ஓட்ட வீரர்களுக்கு மத்தியில் 06 வது இடத்தை MAS Intimates Silueta நிறுவனத்தின் குழுத் தலைவர் தனுஷ்க பிரதீப் பெற்றுக் கொண்டார். நாட்டுக்கு பெருமை தேடித் தந்த தனுஷ்க அவர்களுக்கு MAS நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!