நிமலுக்கு 40 வயதாகிறது. அவர் வர்த்தகர். நிமலின் மனைவி இல்லத்தரசி. இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். கொஞ்ச நாட்களாக நிமலின் செயலில் வித்தியாசம் தெரிந்தது. அவருக்கு தமது மனைவி மேல் பெரும் சந்தேகம். மனைவி வேறொருவருடன் உறவு வைத்திருக்கிறாரா என்று நிமல் சந்தேகப்பட்டார். மனைவி அழகாக உடுத்துவதை நிமல் விரும்பவில்லை. அவர் செல்லுமிடங்களை சூட்சுமமாக கண்காணித்தார். மனைவியின் திறன்பேசி, பணப்பை, சட்டைப்பை போன்ற சகலதையும் சோதித்துப் பார்த்தார். உடுத்திய ஆடைகளையும் கவனித்தார். ஒழுக்கம் உள்ள பெண்ணாக இருந்த நிமலின் மனைவி, இத்தகைய செயல்களால் மிகவும் மனமுடைந்து போனார். நிமலின் தீவிர சந்தேகம் காரணமாக வீட்டில் அடிக்கடி சண்டை நடந்தது. ஏறத்தாழ எல்லோர் மனதிலும் கூடுதலாகவோ, குறைவாகவே சந்தேகம் இருப்பது வழக்கம். ஆனால், அந்த சந்தேகம் எல்லை தாண்டியதாக காணப்படுமாயின், அது சந்தேகப்படும் நபர்க்கும், சுற்றத்தார்க்கும் உறவுக்;குள் தீவிர சந்தேகம் எழுமாயின், அது வாழ்க்கையை நல்ல மாதிரியாக கொண்டு செல்ல முடியாத அளவு…
Author: Diyani Editors
பெண்கள் முன்னிலையில் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ‘அபிமானி திரிலிய’ என்ற தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், அபிமானியில் வெற்றி பெற்ற பெண்களை தொழில் முயற்சியாண்மை ஆற்றல்களுடன் வலுவூட்டுவது தான். இதன்மூலம், புதிய பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதுடன், வணிகத்தை விருத்தி செய்வதற்காக தொழிற்பயிற்சி வழங்குவதற்கும், புதிய வாழ்வாதார வழிகளை சிறப்பாக உருவாக்கிக் கொள்வதன் ஊடாக ஆற்றல் மிக்க பெண் தொழில் முயற்சியாளர்களை கட்டமைப்பதற்கும் MAS குழுமம் பங்களிப்பு நல்கியது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட ஊக்கமுள்ள பெண்ணான ஆஷா சந்தமாலியின் கதையே இது. இவர் Linea Aqua நிறுவனத்தைச் சேர்ந்தவர். கிராமிய பின்புலத்தை நேசிக்கும் வாழ்க்கை முறைக்குப் பழகிய நான், சிறுவயது தொடக்கம் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்டியவள். எனினும், பின்னாட்களில் ஆடையுற்பத்தித் துறையில் வேலை செய்யத் தொடங்கியதை அடுத்து, ஓய்வென்பதே இருக்கவில்லை. வேலை முடிந்து வீடு வந்து சமயம் நேரம் இருக்கையில் ஏதேனும் பயிரிட…
பிளாஸ்ரிக் இல்லாத இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், வறக்காப்பொல பிரதேசத்தில் உள்ள அல்கம நீர்வீழ்ச்சியின் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் தொண்டுச் சேவை சமீபத்தில் இடம்பெற்றது. இதில் வறக்காப்பொல பிரதேச செயலகத்துடன், MAS Intimates – Thulhiriya நிறுவனமும் இணைந்திருந்தன.
விளையாட்டுப் போட்டிகளில் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வகையிலான ஆடைகளை உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னணியில் திகழும் MAS Holdings இன் Bodyline நிறுவனம், 2024ஆம் ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கையின் தேசிய மெய்வாண்மைப் போட்டியாளர் குழாமிற்கு அதிநவீன விளையாட்டு ஆடைகளை பெற்றுக் கொடுத்து அனுசரணை வழங்க இலங்கை மெய்வாண்மை சங்கத்துடன் (SLAA) கைகோர்த்துள்ளது. இலங்கையின் தேசிய குழாம் பங்கேற்கும் சகல சுற்றுத்தொடர்களுக்காகவும் Bodyline மூலம் தரத்தில் சிறந்த விசேட விளையாட்டுத்துறை ஆடைகள் பெற்றுக் கொடுக்கப்படும். Bodyline மூலம் தயாரிக்கப்பட்ட விளையாட்டுத்துறை ஆடைகள், பல தசாப்த காலமாக MAS குழுமம் பெற்ற தேர்ச்சியின் உச்ச பலாபலனாகத் திகழும் தயாரிப்புக்களாக, நவீன தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டவை. இந்த ஆடைகள் ஒட்டுமொத்த இலங்கையையும் பிரதிபலிக்கும் வகையில் நீலமும், பொன் வண்ணமும் சேர்த்து கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டவை. அத்துடன், வலுவையும், ஈடுகொடுக்கக் கூடிய தன்மையையும், புதுமையையும் குறிக்கும் வகையில், யானையும் சிங்கமும் ஒன்று சேர்ந்த…
MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia Innovation விருதை பெற்றுள்ளது. புத்தாக்கங்களில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் புகழ்பெற்ற உலக அறிவாற்றல் நிறுவனமான Clarivate, இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற மதிப்பிற்குரிய Innovation Forumஇல் இந்த விருது வழங்கப்பட்டது. South Asia Innovation Awardsக்கான தேர்வு செயல்முறை Clarivateஇன் சிறந்த 100 Global Innovators™ என்ற வழிமுறையுடன் நெருக்கமாக இணைகிறது, இது உலகளாவிய கண்டுபிடிப்புத் தலைவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோலாகும். Derwent World Patents Index™ (DWPI™) மற்றும் Derwent Patents Citation Index™ ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில், காப்புரிமை அளவு மற்றும் ஒவ்வொரு காப்புரிமை பெற்ற யோசனையின் (Ideas) புத்தாக்கத் திறனின் வலிமையையும் Clarivate மதிப்பீடு செய்கிறது. MAS Holdingsஇன் பிரதம…
கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆரம்ப கட்டமாக திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களுடன் தேசிய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டுதல் மூலம் கருத்தரங்கு எமது நிறுவனம் சார்பாக நடாத்தப்பட்ட்துடன் ,PET பாட்டில் சேகரிப்பு BIN திருமுருகண்டி ஆலய வளாகத்தில் நிறுவியதுடன் அம்மாணவர்களுடன் ஒன்றிணைந்து அப்பகுதியில் சிரமதான பணி செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இரத்தவங்கி வேண்டுகோளிற்கிணங்க எமது நிறுவன சமூக பொறுப்பு என்ற வகையில் ஏறத்தாழ 70 ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்.
Trischel நிறுவனத்தின் தலையீட்டுடன் lululemon (CANADA) நிறுவனத்தின் நிதியளிப்புடன் கஸ்னாவ பிணியாய்வு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றும் சிறுவர் பூங்காவும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
வரக்காபொல சுகாதார வைத்திய பணிமனையின் வேண்டுகோளுக்கிணங்க Trischel நிறுவனத்தின் தலையீட்டுடன் lululemon (CANADA) நிறுவனத்தின் நிதியளிப்புடன் வரக்காபொல MOH பணிமனைக்குட்பட்ட போப்பிட்டிய பிணியாய்வு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
வெசக் காலத்துடன் இணைந்து இரத்த தான முகாம் Noyon அங்கத்தவர்களால் நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.